கொழும்பில் பிரபல கட்டிடம் ஒன்றில் பாரிய தீப்பரவல் - கட்டுப்படுத்த இராணுவ ஹெலிகொப்டர்

கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில் உள்ள கட்டடம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ பரவல் இன்று  (20.09.2025) பிற்பகல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

புறக்கோட்டை 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த இராணுவத்திற்கு சொந்தமான 2 வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணிகளில் பெல் ரக ஹெலிகொப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த கட்டிடத்தின் 3வது மாடியிலேயே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 12 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை அறிவித்துள்ளது.
புதியது பழையவை