கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மாகாண ஆணையாளராக நிந்தவூரைச் சேர்ந்த எம்.பி.எம். சுபியான் (11.09.2025) பதவியேற்றார்.
இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான சட்டத்தரணி எம்.பி.எம். சுபியான், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சமூகவியல் (விசேட) துறையில் தனது பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் நீதி அமைச்சின் சமுதாயச் சீர்திருத்த திணைக்களத்தில் சமுதாயச் சீர்திருத்த உத்தியோகத்தராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.
பின்னர் இலங்கை நிர்வாக சேவைத் தேர்வில் சித்தி பெற்று, அனுராதபுர மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளராக நான்கு ஆண்டுகள் கடமையாற்றி, பல தேர்தல்களை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் நடத்தி முடித்துள்ளார்.
இந்த அனுபவத்தின் அடிப்படையில் தற்போது அவர் மாகாண ஆணையாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
சட்டத்துறையிலும் தனது பங்களிப்பை வழங்கி வரும் இவர், தற்போது பொது நிர்வாகத் துறையில் முதுகலைப் பட்டப் படிப்பையும் மேற்கொண்டு வருகிறார்.