இலங்கையின் சுற்றுலாத்துறையில் புதிய பரிணாமம் உருவாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நாட்டின் முதல் சுற்றுலா ஹோட்டல் திட்டமான கிராண்ட் செரண்டிப் கொழும்பு கடந்த வெள்ளிக்கிழமை (10.10.2025) அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்வு, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத் தலைமையில், கொழும்பு ஷாங்க்ரி-லா ஹோட்டலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திட்டத்தின் தொடக்க விழாவில், இலங்கையின் புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா, மேலும் இந்தத் திட்டத்தின் மேம்பாட்டாளராக விளங்கும் ABEC பிரீமியர் நிறுவனத்தின் பிரதிநிதி திலிப் கே. ஹெராத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.