மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (08.10.2025) காலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த கார் வீதியோரமாகப்பயணித்தவர் மீது நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் ஓட்டமாவடி பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சீனி முகம்மது முகம்மது இப்றாஹீம் (வயது - 63) என்பவர் மரணமடைந்துள்ளார்.

வாகனச்சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை