மட்டக்களப்பு தாண்டியடி மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுப்பணிகள் ஆரம்பம்.!

மாவீரர் தின அஞ்சலிக்காக இன்றைய தினம் (23.11.2025) மட்டக்களப்பு மாவட்டம் தாண்டியடி துயிலும் இல்ல சிரமதான மற்றும் ஏற்பாட்டு பணிகள் ஆரம்பமாகின.

இதில் தமிழ் ஈழ உணர்வாளர்கள் மற்றும் வவுணதீவு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு தாண்டியடி துயிலும் இல்லத்தில் இராணுவமுகாம் இருப்பதால் இந்தவருடம் தாண்டியடி பொது விளையாட்டுமைதானத்தில் மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் மாவீர்ர்களுக்கான நினைவு வணக்கம் இடம்மெறவுள்ளது.

புதியது பழையவை