தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபை அமர்வுக்கு இன்று (12.11.2025) உள்நாட்டுப் பெரிய வெங்காயங்களால் கோர்க்கப்பட்ட மாலைகளை அணிந்துகொண்டு கலந்துகொண்டனர்.
உள்நாட்டுப் பெரிய வெங்காயத்தின் விலை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு வெங்காயத்திலான மாலை அணிந்து சென்றுள்ளனர்.
அத்துடன் அவர்கள் விவசாயியின் மகன் அரசனானான் விவசாயி பாழானான் என கோஷமிட்டவாறு சபைக்குள் நுழைந்துள்ளனர் இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்குப் பின்னர் பிரதேச சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.