மட்டக்களப்பு கரடியனாறில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

மட்டக்களப்பு, கரடியனாறு கார்மலை பகுதியில் 55 வயதுடைய நபர் ஒருவர் இன்று (10.11.2025 ) யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த நபர் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கார்மலை பகுதியில் இன்று(10.11.2025) காலை 11.00 மணியளவில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது அங்கு திடீரென வந்த யானை அவரைத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே   உயிரிழந்துள்ளார்.


இதனையடுத்து குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார்  தெரிவித்தனர்.
புதியது பழையவை