நிவாரண உதவிகளை கொண்டு சென்ற கார் புகையிரதத்துடன் மோதி விபத்து.!

காலி, பியதிகம புகையிரத கடவையில் இன்று கார் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காலியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதத்துடனேயே இந்த கார் மோதியுள்ளது.

எனினும் விபத்தில் யாருக்கும் எவ்வித காயங்கள் ஏற்படவில்லை என  கூறப்படுகின்றன.

வெள்ள நிவாரண உதவிகளை கொண்டு சென்ற கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
புதியது பழையவை