திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் 4 பௌத்த பிக்குகள் உட்பட பத்து பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு.!

திருகோணமலை கடற்கரையில் கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் தேதி புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பௌத்தப்பிக்குகள் உட்பட 10 பேருக்கும் விளக்கமறியல் எதிர்வரும் (28.01.2026)ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. 

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதிவான் எம். எஸ் எம். சம்சுதீன் முன்னிலையில் இன்று (19.01.2026)ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை