மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி மீன் சந்தையில் இன்று(20.01.2026)ஆம் திகதி செவ்வாய்கிழமை மனித நுகர்வுக்கு ஒவ்வாத நிலையில் பழுதடைந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட 16Kg கீரி மீன்கள் கைப்பற்றப்பட்டு பொதுச் சுகாதார பரிசோதகர்களால் உடனே அழிக்கப்பட்டது.
களுவாஞ்சிக்குடி பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்றைய தினம் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது வியாபாரிக்கு கடுமையான எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.