அம்பாறையில் யுவதி ஒருவருக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வந்த நபரொருவர் நேற்று (27.02.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள 46 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் யுவதி ஒருவருக்கு தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து குறித்த யுவதி பொலிஸில் முறைப்பாடளித்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் அவர் அந்தப் பகுதியில் நீண்டகாலமாக பல பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாகக் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.