இச் சம்பவம் இன்று (23.02.2026)ஆம் திகதி மதியம் 3.30 நோட்டன் லக்சபான பகுதியில் இடம் பெற்று உள்ளது என நோட்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொலிசார் மேலும் கூறுகையில் சிவனடி பாத மலைக்கு வந்து தரிசனம் செய்த பின்னர் மீண்டும் காலி பகுதியில் தங்களது வீட்டிற்கு திரும்பிய வேலையில் நோட்டன் லக்சபான பகுதியில் வீதியை விட்டு விலகி 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததால் காரில் சென்ற நான்கு பேரில் மூவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் லக்சபான கிராமிய வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு இரண்டு பேர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்திய சாலைக்கு மாற்றம் செய்ய பட்டு உள்ளனர்.
முதற் கட்ட விசாரணையில் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனவும்.
விபத்து குறித்து நோட்டன் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.