2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தர சாதணை சாதாரண தரப் பரீட்சை இன்று(26.02.2026) நிறைவடையவுள்ள, நிலையில் அமைதியான வழியில் வீடுகளுக்கு செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் ஆபத்து உள்ளதால் பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பரீட்சை இன்று முடிவடைந்த பின்னர் இது போன்ற சூழ்நிலைகள் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது கவனம் செலுத்துமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.