மட்டக்களப்பில் பெண்களுக்கான தொழிற்கல்வி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.!


​மட்டக்களப்பு, கல்லடி  கல்லடியில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்ல அமைப்பின் ஏற்பாட்டில், தொழிற்கல்வி பயிற்சியினை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா இன்று(29.03.2026) ஞாயிற்றுக்கிழமை கல்லடி Green Garden மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

​இந்நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர்  ஞா. ஸ்ரீநேசன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்ததுடன், அவர்களின் திறமைகளை பாராட்டி வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

​சான்றிதழ் வழங்கிய பின் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் அவர்கள்
​"பெண்கள் தொழிற்கல்வி பெற்று, அதன் மூலம் பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு அடைவது என்பது ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு மிக அவசியமான ஒன்றாகும். 

இத்தகைய பயிற்சிகள் பெண்களின் சுய மரியாதையையும் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும்," எனத் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
புதியது பழையவை