மூதூர் - கிண்ணியா வீதியில் பேருந்து விபத்து - பலர் காயம்.!

​திருகோணமலை மாவட்டம் 
மூதூர் - கிண்ணியா வீதியில் இன்று (22.04.2026)மாலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

​சம்பவம் குறித்து தெரியவருவதாவது.

இன்று (22) மாலை மூதூர் - கிண்ணியா வீதியூடாகப் பயணித்த பயணிகள் பேருந்து ஒன்று, இரண்டாவது பாலத்திற்கு அருகாமையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

​இந்த விபத்தின் போது பேருந்தில் பயணித்த பயணிகள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தையடுத்து அவ்விடத்தில் மக்கள் கூடியதுடன், காயமடைந்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

​இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை