மட்டக்களப்பில் சோகம் - பயிர்ச்செய்கைக்காக நீர் இறைக்க முற்பட்ட போது மின்சாரம் தாக்கி குடும்பத்தலைவர் உயிரிழப்பு.!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடி பகுதியில் மின்சாரம் தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று (11.04.2026) ஆம் திகதி காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

​சம்பவம் குறித்து தெரியவருவதாவது.

கச்சக்கொடி 135C கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட சுவாமிமலை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை வீரசிங்கம் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

​இன்று காலை தனது பயிர்ச்செய்கை நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்வதற்காக, அருகில் இருந்த நீரோடும் வாய்க்காலிலிருந்து மின்சார நீர்ப்பம்பி (Water Pump) மூலம் நீர் இறைக்க இவர் முயற்சித்துள்ளார்.
 
இதன்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

​உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

​சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
புதியது பழையவை