வித்யா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி சிறையில் உயிர் மாய்ப்பு.!

புங்குடுதீவு - வித்யா படுகொலை வழக்குடன் தொடர்புடைய மரண தண்டனை கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 

யாழ். சிறைச்சாலையில் இன்று(25.05.2026) காலை அவர் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

பூபாலசிங்கம் ஜெயகுமார் என்ற கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட இருந்த நிலையிலேயே குறித்த கைதி தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
புதியது பழையவை