விபச்சார விடுதி சுற்றிவளைப்பு - பெண்கள் மூவர் கைது.!

பண்டாரவளை, பிதுனுவெவ பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை, பண்டாரவளை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் கடந்த 22ஆம் திகதி இரவு சுற்றிவளைத்து முற்றுகையிட்டுள்ளனர்.

 பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில், அங்கு இருந்த மூன்று பெண்களும், விடுதியின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் பண்டாரவளை, இரத்தினபுரி மற்றும் பாதுக்க ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களின் வயது 35 முதல் 60 வரை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், பண்டாரவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை