மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு கல்முந்தல் திருவள்ளுவர் வித்தியாலயத்தில் திறன் பலகை திறப்பு விழா - சாதனை மாணவர்களும் கௌரவிப்பு!


பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட் /பட்/ கல்முந்தல் திருவள்ளுவர் வித்தியாலயத்தில், நவீன கற்பித்தலுக்கான திறன் பலகை (Smart Board) திறப்பு விழா நேற்று (23.06.2026) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெற்றது. 

பாடசாலை முதல்வர் திருமதி சிறிப் பிரியா வேழவேந்தன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

​பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் நிதி அனுசரணையுடன் கொள்வனவு செய்யப்பட்ட இந்த நவீன திறன் பலகையினை, பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
​இவ்விழாவின் போது, அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9 'A' தரச் சித்திகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். 

அத்துடன், ஆரம்பப் பிரிவு வகுப்பறைகளை அழகாக வடிவமைக்கும் (கவின் நிலை) போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற ஆசிரியருக்கும் இதன்போது கௌரவிப்பு வழங்கப்பட்டது.

​இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், நன்கொடையாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை