சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனுக்கு மன்னிப்பு கோரி அட்டனில் ஆர்ப்பாட்டம்!

​சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்பவருக்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தி, அட்டன் மல்லியப்பு சந்தியில் இன்று (20.09.2026) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

​கொட்டும் மழைக்கும் மத்தியில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படங்கள் தாங்கிய பதாகைகளையும் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியவாறு தமது கோரிக்கைகளை வெளிப்படுத்தினர்.

​அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
புதியது பழையவை