பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையான நடைபவனி: களத்தில் ரிஷாத்


பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ் கட்சிகளின் நடைபவனிக்கு முஸ்லிம்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாளை 3ஆம் திகதி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,

“நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பூர்வீக வாழிடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்தப் பேரினவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் அரசின் போக்குகள் மற்றும் ஜனாஸா எரிப்பு என்பவற்றைக் கண்டித்தே இந்தக் கண்டன நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் என்ற வகையில், முஸ்லிம் சமூகமும் இன்று பல நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது.

எனவே, எமது சகோதர சமூகம் ஏற்பாடு செய்துள்ள இந்த நடைபவனிக்கு, முஸ்லிம் சமூகமும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என்றுள்ளது.

புதியது பழையவை