மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 34 பேரும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேரும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 37 பேரும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேரும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேரும், வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேரும், வவுனதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேரும், ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மொத்தமாக 169 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன், ஏறாவூரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.