சீனா தன் புதிய விண்வெளி நிலையத்தை அமைக்க மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
நி ஹாய்ஷெங், லு பூமிங், டாங் ஹாங்போ ஆகிய மூன்று விண்வெளி வீரர்களும் மூன்று மாதம் பூமியிலிருந்து 380 கிலோமீட்டர் தூரத்தில் டியான்ஹே என்ற விண்கலத்தில் தங்குவர்.
சீனாவின் விண்வெளி வீரர்கள் நீண்டகாலம் விண்வெளியில் தங்கவிருப்பது ஐந்து ஆண்டுகளில் இதுவே முதல்முறை.
ஷென்சூ12 என்ற விண்கலம் நேற்று முன் தினம் (ஜூன் 16, வியாழக்கிழமை) உள்ளூர் நேரப்படி 9.22 மணிக்கு, கோபி பாலைவனத்திலுள்ள ஜியூகுவான் செயற்கை கோள் ஏவுதளத்திலிருந்து மார்க் 2 எஃப் ராக்கெட் மூலம் சீனாவால் ஏவப்பட்டது.
விண்வெளி தொடர்பான சீனாவின் அடுத்தடுத்த பணிகளில் மற்றொரு முயற்சி தான் இந்த வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய திட்டம்.
கடந்த ஆறு மாதங்களில் நிலாவிலிருந்து பாறை மற்றும் மண்ணின் மாதிரியை பூமிக்கு கொண்டுவந்தது, செவ்வாய் கோளில் 6 சக்கர ரோபோட்டை நிறுத்தியது என கடினமான செயல்களை நிகழ்த்தி காட்டியுள்ளது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.