இலங்கை மீனவர்கள் மீது சர்வதேச கடற்பரப்பில் தாக்குதல்


சர்வதேச கடற்பரப்பில்  மீன்பிடிநடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர்கள் சிலர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை அதிகாரிகளினால்   பல மணி நேரம் தாக்கப்பட்டதாக  குறித்த மீனவர்கள் கூறுகின்றனர்.

தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் பயணித்த  இரண்டு படகுகளும் நேற்று  பிற்பகல் திக்கோவிட்ட   துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இந்த நிலையில்  தாக்குதலுக்குள்ளான  மூவர்  நீர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு  இழுவைப் படகுகள் மூலம் சுமார் 13 மீனவர்கள் கடந்த மே மாதம் 07ஆம் திகதி கடற்றொழிலுக்கு பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை