நாளைக்குள் தீர்வு இல்லையேல் நாடெங்கும் போராட்டம்!


தமது கோரிக்கைகளுக்கு நாளைய தினத்துக்குள் தீர்வுகளை முன்வைக்காவிட்டால் நாடு பூராகவும் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி வரும் என்று அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரச வைத்தியசாலைகளில் தாதிமார் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் 8 அம்சக் கோரிக்கைகளை சுகாதார அமைச்சுக்கு முன்வைத்துள்ளது.

ஆனால், இதுவரையில் அவற்றுக்குத் தீர்வுகள் கிடைக்கவில்லை என்று அந்தச் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதனால் நாளை வரையில் அரசுக்குக் கால அவகாசத்தை வழங்குவதாகவும், அதற்குள் தீர்வுகளை முன்வைக்காவிட்டால் முன்னறிவித்தல் எதுவும் இன்றி தொழிற்சங்கப் போராட்டத்துக்குச் செல்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தி தாதிமார் உள்ளிட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் கடந்த வாரத்தில் நாடு பூராகவும் வைத்தியசாலைகளுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை