மட்டு-காத்தான்குடி தபால் நிலையம் தற்காலிகமாக முடக்கம்


மட்டக்களப்பு காத்தான்குடி தபாலகத்தில் கடமையாற்றும் இரு ஊழியர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதையடுத்து காத்தான்குடி தபாலகம் தற்காலிகமாக இன்றும் நாளையும் மூடப்பட்டுள்ளது.

காத்தான்குடி தபாலகத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது மற்றுமொரு ஊழியருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து சுகாதார அதிகாரிகளின்ஆலோசனையின் பேரில் தபாலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஓரிரு தினங்களில் பி.சி.ஆர் அறிக்கைகள் கிடைக்கும் எனவும் அதன் பின்னர் முழுமையாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரியொருவர் தெரிவித்தார்.
எனினும் அவசியமான நடவடிக்கைகளை மாத்திரம் மேற் கொள்வதாக தபாலக ஊழியர்கள் தெரிவித்தனர்.
புதியது பழையவை