சமூகப் பணியாளர் கொரோனாவுக்குப் பலி!


யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் நிர்வாக இயக்குநர் சொக்கநாதன் யோகநாதன் (வயது 73) யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றால் மரணமடைந்துள்ளார்.

அமரர் யோகநாதன் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா முதலான மாவட்டங்களில் வதியும் போரினால் பாதிப்புற்ற ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு உதவும் வெளிநாடுகளிலிருந்து இயங்கும் தன்னார்வத் தொண்டர் அமைப்புகளின் தொடர்பாளராகவும் அர்ப்பணிப்புடன் இயங்கியவர்.
அன்னாரின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று ஆஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளது.

நேற்று அதிகாலை 3.30 மணிக்கு மறைந்த யோகநாதனின் இறுதி நிகழ்வுகள் அன்றைய தினமே முற்பகல் 11.30 மணிக்கு நடைபெற்றது.

சமூக இடைவெளி பேணலுடன் நிகழ்ந்த இந்த இறுதி நிகழ்வில் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் நிர்வாகப் பணியாளர் செல்வி காயத்திரி தங்கராசா மற்றும் கணக்காளர் பொன்னம்பலம் தினேஷ் ஆகியோர் மாத்திரம் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை