யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தில் இன்று(10) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில், பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!, கொரோனா திரைமறைவில் எங்களை வதைக்கதே, அனைவருக்கும் தடுப்பூசி வழங்கு, பாதுகாப்பு வழிகளைச் செய்து பாடசாலைகளை தொடங்கு, உணவுப் பொருட்கள் – எரிபொருட்களின் விலையை உடனே குறை!, விவசாயிகள் – மீனவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்குத் தீர்வு காண்!, மற்றும் நிறுத்து நிறுத்து விலை உயர்வை நிறுத்து உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகைதந்த யாழ்ப்பாண பொலிஸார் போராட்டத்தை நிறைவு செய்யுமாறு வலியுறுத்தியதை அடுத்து, போராட்டம் நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



புதியது பழையவை