பெருந்தொகைப் பணத்துடன் இருவர் கைது!


அத்துருகிரிய பகுதியில் ஒரு கோடி 30 இலட்சம் ரூபா பணத்துடன் சந்தேகநபர்கள் இருவரைப் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைதுசெய்துள்ளனர்.

கொலன்னாவை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த வேளை, பணத்துடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் சட்டவிரோதமாகப் பெறப்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
புதியது பழையவை