நாட்டின் தற்போதைய நிலைமையில் தினமும் இடம்பெறும் கொரோனா மரணங்கள் 250ஐ கடந்து சென்றிருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
தினமும் 5000 ற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகி வருவதாக உத்தியோக தகவல்கள் கிடைத்திருப்பதாக அச்சங்கத்தின் உதவிச் செயலாளரான மருத்துவர் நவின் டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கையானது, வரும் வாரங்களில் இரட்டிப்பாகலாம் என அவர் எதிர்வும் கூறியுள்ளார்.