#எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி 10 ரூபாவால் குறித்த உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு கிலோ கேக்கின் விலையை 100 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை தொடக்கம் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வரும் என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.