கோவிட் மற்றும் டெல்டா வரைஸ் பரவலின் தீவிரம் காரணமாக ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் கடும் சுகாதார பாதுகாப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள அரசு அடுத்தகட்ட நகர்வாக நாட்டை முடக்குவதற்கு ஆலோசித்து வருவதாக பத்திரிகையொன்று இன்றைய தினம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதியில் இந்த முடக்கம் அமுலுக்கு வரலாமெனவும், இடைவேளை சகிதமான இந்த முடக்கம் சுமார் ஒரு மாத காலம் வரை நீடிக்குமெனவும் சுகாதாரதுறையின் உயர்மட்ட வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்துள்ளதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொது முடக்கம் கடுமையாக கடைபிடிக்கப்படும் அதேசமயம் அத்தியாவசிய சேவைகளை மட்டும் இயக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும், பொது முடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.