பிரித்தானியாவில் தமிழீழத் தாயகத்தின் மாவீரர் தினம்-அலையெனத் திரண்ட மக்கள்

பிரித்தானியாவில் ஒக்ஸ்போட்டில் தமிழீழத் தாயகத்தின் மாவீரர் துயிலும் இல்லங்களைப் பிரதிபலிக்கும் கல்லறைகள் அமைத்து உணர்வெளிச்சியுடன் தொடங்கப்பட்டது மாவீரர் நாள்.

உலகப்பரப்பில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலத்தில் நடைபெறும் மாவீரர் நாள் என்பதில் ஒக்ஸ்போட்டில் உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நடைபெறும் மாவீரர் நாள் முக்கியத்துவம் பெறுகிறது.

மாவீரர் வாரம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து மாவீரர் நினைவெழுச்சி நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று இன்று (27) மாவீரர் நாள் புத்தெழுச்சி பெற்றுள்ளது.

மாவீரரது பெற்றோர், மாவீரர்களின் துணைவியர் ,மாவீரத் தந்தையின் பிள்ளைகள், மாவீரர் குடும்ப உறவுகள், களங்களில் அவர்களுடன் நின்று களமாடிய நண்பர்கள், உயிரிலும் மேலான தாய்த்தமிழ் சொந்தங்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடி விளக்கேற்றும் இத்தருணம் ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களிலும் மாவீரர் திருமுகங்கள் வந்து நிழலாடி சுடர் விட்டெரிவதை அவர்களது கண்களில் வழிந்தோடும் கண்ணீர் துளிகள் வெளிப்படுத்தி நிற்கிறது.

புதியது பழையவை