இன்று(29) வானில் அரிய காட்சி ஒன்று தோன்றவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் பௌதீகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவித்தார்.
செவ்வாய் கிரகமும் வியாழன் கிரகமும் ஒன்றை ஒன்று சந்திப்பது போன்ற காட்சி வானில் இன்று தோன்றவுள்ளது.
இதனை மக்கள் வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவித்துள்ளார்.
