யாழில் இடம்பெற்ற கோர விபத்து - பரிதாபமாக இளைஞன் உயிரிழப்பு!



யாழ்.தாவடி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இளைஞர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விபத்து நேற்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது குறிப்படத்தக்கது.

மேலும் இந்த விபத்தில் சம்பவத்தில் யாழ்.ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த அனுஜன் (வயது 19) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் ஜெயசீலன் ரகுசன் (வயது 17) என்ற இளைஞன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை