அங்குருவத்தோட்ட, ஊருதொடாவ பிரதேசத்தில் காணாமல்போன இளம் தாயும் அவரது பெண் குழந்தையும் சடலங்களாக மீடகப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருவரும் அங்குருவாதொட்ட ரத்மல்கொட காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத பெண் குழந்தையான தஷ்மி திலன்யா இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளனர்.
கணவர் வேலைக்குச் சென்ற நிலையிலேயே அவர்கள் இருவரும் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.