மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரின் ஈனச்செயல் - பெண்கள் குளிக்கும் இடத்தில் சிசிரிவி கமரா



மட்டக்களப்பு மாவட்டத்தில் சின்ன உப்போடை பகுதியில் உள்ள கீறியோடை வாவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் சிசிரிவி கமராவை வைத்து பார்க்கும் அளவிற்கு மோசமான செயல் இடம்பெற்று வருகின்றது.

கீறியோடை வாவியில் வளர்ப்பு மீன் திட்டம் என்ற போர்வையில் பொதுமக்கள் அனுமதி இன்றி வாவியை மறித்து மீன் வளர்க்கப்படுவதாகவும் இது தொடர்பில் கேட்கச் சென்ற மக்கள் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அந்த வாவியில் மீன்பிடித்த ஒருவரை தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர் வீடு திரும்பி உள்ள வேளையில் அவ்விடத்தில் யாரும் மீன் பிடிக்கக்கூடாது என்று பதாதை இடப்பட்டுள்ளதாக பாதிப்படைந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, இது தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகளுடன் உரையாடிய போது இந்த ஆற்றில் மீன் வளர்ப்பதற்கு ஒருவர் அனுமதி எடுத்துள்ளதுடன் அவர் கனடாவிற்கு சென்றுள்ளார்.

தற்போது அந்த அனுமதியை வைத்து ஏனையவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனுமதி பெற்றவர் அவ்வாறு செயற்படவில்லை.


புதிதாக தான் யாரோ இவ்வாறு செய்கிறார்கள். இங்குள்ள அதிகாரிகளுக்கும் இதனை கண்டுக்கொள்ள வேண்டாம் என்று பாரிய அச்சுறுத்தல் இருக்கலாம்.

குறித்த நன்னீர் மீன் திட்டத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னெடுத்து வருவதாகவும் அப்பிரதேசத்தில் அந்த வாவியை நம்பி வயிற்றுப் பசிக்காக மீன்களைப் பிடித்து தங்களது வாழ்வாதாரத்தை போக்கியவர்கள் அந்த நபர்களால் தாக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி சிசிரிவி கமரா மற்றும் ட்ரோன் போன்றவற்றை பயன்படுத்தி பெண்கள் குளிக்கும் போது வீடியோக்கள் எடுப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.


ஆற்றினை மறைத்து கூடாரம் அமைத்து மீன் வளர்ப்பதாக கூறி பெண்கள் குளிக்கும் போது சிசிரிவி கமரா மூலம் அதை அவர்கள் பார்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.


இந்த நிலையில், இவ்வாறான ஒரு செயற்பாட்டை உலகத்திலேயே யாரும் செய்யவில்லை என்றும் இது போன்ற மோசமான நடவடிக்கையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஈடுபடுகின்றது என்றும் சாணக்கியன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
புதியது பழையவை