மீண்டும் 3 மணித்தியால மின்வெட்டு!



சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் விடப்படுவதால் ஆகஸ்ட் 16 ஆம் திகதியுடன் சமனல குளத்தின் மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலிருந்து விடுபட மாற்று மின்சாரத்தை கொள்வனவு செய்ய முடியாத பல மாவட்டங்களில் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இன்று (08 -08-2023) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.


மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தம்
“ஆகஸ்ட் 16ஆம் திகதி சமனல ஏரி நீர்த்தேக்கத்தில் இருந்து மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்படும்.


இது முற்றாக நிறுத்தப்பட்டால், மாற்று மின்சாரத்தை கொள்வனவு செய்யாவிட்டால் மாத்தறை மாவட்டம், காலி, இரத்தினபுரி, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூன்று மணி நேர மின்வெட்டுக்கு செல்ல வேண்டியிருக்கும்.
புதியது பழையவை