வியாழேந்திரன் பிள்ளையானை இடைமறித்த ஊடகவியலாளர்கள் - செய்தி சேகரிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஊடகவியாளர்கள்



மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கும், செய்தி சேகரிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்ட ஊடகவியாளர்களால் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்றைய தினம்(31.08.2023) இடம்பெறுகின்ற நிலையில் சில ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தது

இந்நிலையில் அக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஊடகவியாளர்களால் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.




மறுக்கப்பட்ட ஊடக உரிமை
கடந்த பல ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வந்த சில ஊடகவியளார்கள் இன்றைய கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு சில ஊடகவியலாளர்களைப் பழிவாங்கும் நோக்குடன் இவ்விடயம் மேற்கொள்ளப்பட்டுவதாக ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக முன்றலில் ஊடகவியலாளர்களால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள ஊடக அமைச்சருக்கு தெரியப்படுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் முயற்சி செய்த போதும் அது கைகூடவில்லை என கூறப்படுகிறது.

அதைனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட ஊடக உரிமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையகத்தின் மட்டக்களப்பு காரியாலயத்தில் முறைப்பாடொன்றினையும் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை