மின்சார வேலியில் சிக்குண்டு கொம்பன் யானை உயிரிழப்பு!



முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பெரிய சாளம்பன் கிராமத்தில் வயல் நிலத்தின் பாதுகாப்புக்கு போடப்பட்ட மின்சார வேலி ஒன்றில் சிக்குண்டு கொம்பன் யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சுமார் 15 வயது மதிக்கத்தக்க யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

யானையின் உயிரிழப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், பொலிசார் சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

மின்சார வேலையினை இணைப்புச் செய்த காணியின் உரிமையாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்.


இதேவேளை சாளம்பன் கிராமத்தில் காட்டு யானையினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

தங்கள் கிராமத்துக்கான யானை வேலி இதுவரை அமைத்துக் கொடுக்கப்படவில்லை என்றும் இதனால் தொடர்ச்சியாக விவசாய நிலங்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும் யானைகளால் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
புதியது பழையவை