தமிழரசின் புதிய தலைவருக்கு கிழக்கு ஆளுநரின் வாழ்த்து செய்தி



தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு தீர்வு
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள உங்களுடைய சேவைக் காலத்தில் தமிழ் மக்களுக்கான உரிமைகள் வென்றெடுக்கப்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்.


அத்தோடு, வடக்கு கிழக்கு தமிழர்கள் மாத்திரமின்றி நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் மென்மேலும் வளர்ச்சி அடைய தங்களின் பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை