மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலக கலாசார பொங்கல் விழா





மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலக கலாசார பொங்கல் விழாவானது இன்று(26-01-2024)ஆம் திகதி பிரதேசசெயலாளர் சோ. ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றனர்.

பிரதேச கலாசார உத்தியோகஸ்தர் ஆ.பிரபாகரன் அவர்களின் ஏற்பாட்டிலே பிரதேசத்தின் ஆலய நிர்வாகங்கள், அறநெறி பாடசாலைகள், கிராம மட்ட அமைப்புக்களது பங்குபற்றுதலுடன் தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்ட வெள்ளிமலை பிள்ளையார் ஆலய முன்றலிலே சிறப்பாக இடம்பெற்ன.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திரு. வி.துலாஞ்சனன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. ச.சசிகுமார், கணக்காளர் திரு. தி.அம்பிகாபதி, நிருவாக உத்தியோகத்தர் திரு. தி.உமாபதி, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு. செ.ஜெயராஜா, சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. அ.குககுமாரன், போரதீவுப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.








புதியது பழையவை