பிரதி மதுவரி ஆணையாளராக மட்டக்களப்பினை சேர்ந்த - சண்முகம் தங்கராஜா பதவி உயர்வு!




இலங்கை மதுவரித்திணைக்களத்தின் பிரதி மதுவரி ஆணையாளராக மட்டக்களப்பினை சேர்ந்த சண்முகம் தங்கராஜா பதவி உயர்வு பெற்றுள்ளார்.

கொழும்பு மதுவரி திணைக்கள தலைமைக் காரியாலத்தில் இன்று (21-03-2024) அவருக்கு பதிவு உயர்வு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையாளராக கடமையாற்றி வரும் நிலையிலே அவருக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மட்டக்களப்பு பெரியகல்லாறை சேர்ந்த இவர் 1991ஆம் ஆண்டு மதுவரித்திணைக்களத்தின் மதுவரி பரிசோதகராக இணைந்துகொண்டுள்ளதோடு, மதுவரித் திணைக்கள சிரேஸ்ட பரிசோதகராகவும், மதுவரி அத்தியட்சகராகவும் பதவியுயர்வு பெற்று தற்போது கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையாளராக கடமையாற்றிவரும் நிலையில் இந்த பதவி உயர்வை பெற்றுள்ளார்.


மேலும் இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பொது அமைப்புகள் ஊடாக சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதுடன் கலை கலாச்சார வளர்ச்சிக்கும் பங்களிப்பினை வழங்கிவருவதாகவும் கூறப்படுகிறது.
புதியது பழையவை