கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் காத்தான்குடியில் விசேட இப்தார் நிகழ்வு!






கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராச்சி திணைக்களங்களின் பங்குபற்றலுடன்  காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (22-03-2024) விசேட இப்தார் நிகழ்வு இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் அலி சப்ரி, மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீப் முஹம்மட் முஹம்மட் ஹரீஸ், அலிசாஹிர் மௌலானா, எஸ்.எம்.எம்.முஷாரப் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராச்சி உதவி ஆணையாளர் மற்றும் உள்ளூராச்சி மன்றங்களின் செயலாளர்கள் உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

மேலும் பள்ளிவாசல் சம்மேளனம், வர்த்தக சமமேளனம், ஜம்மியத்துல் உலமா காத்தான்குடி கிளை உட்பட அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அமைச்சர் அலி சப்ரி மற்றும் மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன் ஆகியோருக்கு குரான் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிட்டத்தக்கது.



புதியது பழையவை