ஜனாதிபதி தேர்தலில் ரணில்: உத்தியோகப்பூர்வ அறிவிப்பு தொடர்பில் வெளியான தகவல்



இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் ஜூன் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயத்தை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார  தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

சஜித்தின் பொய் பிரசாரம்
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிடுவது ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது வேறு எந்த கட்சியோ ஒரு தலைவராக அல்ல என்றும், சாத்தியமான தேசிய வேட்பாளராகவே போட்டியிடுவதாகவும் கூறியுள்ளார்.


அத்துடன், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் என பொய் பிரசாரம் செய்து கட்சியினரை காப்பாற்றும் போரில் சஜித் பிரேமதாச ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை