நாட்டில் அதிகரிக்கும் டெங்கு நோய்




நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 24,645 டெங்கு  நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்திலிருந்து  அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு  மாவட்டத்திலிருந்து 5,289 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்
மேலும் கம்பஹா  மாவட்டத்திலிருந்து 2,309 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 1,307 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருக்குமாறும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை