நாடளாவிய ரீதியில் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்



அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் கற்றல் நடவடிக்கைகளுக்காக இன்று (20-05-2024) ஆரம்பிக்கப்படவுள்ளன.

முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சுதெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்றைய தினம் மூடுவதற்கு வடமேல் மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளார்.


அனர்த்த நிலைமைகள்
இதேவேளை, நிலவும் மழையுடனான வானிலையினால் எதிர்நோக்கும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் தமது செயற்பாட்டு அறைக்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.


24 மணிநேரமும் இயங்கும் செயற்பாட்டு அறைக்கு இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என அந்த நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் வலயத்தில் 213 பாடசாலைகளும் சிலாபம் வலயத்தில் 158 பாடசாலைகளும் இன்று மட்டும் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை