தாய்வான் அருகே பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்



தாய்வானில்(Taiwan) உள்ள ஹுவாலியன் மாகாணம் அருகே கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது இன்று(22-05-2024) மாலை 4 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக சீனாவின் புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளதோடு,  நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.

கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஹுவாலியன் கடற்கரை அருகே பல்வேறு இடங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை