திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்ட இரா. சம்பந்தனின் பூதவுடல்





இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்  மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று (05-07-2024) விமானம் மூலம் திருகோணமலைக்கு  எடுத்துச் செல்லப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு நேற்று (04-07-2024) பலரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் அஞ்சலி நிறைவுக்கு வந்த பின்னர் பூதவுடல் அங்கேயே வைக்கப்பட்டது.

இரா.சம்பந்தனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்
இரா.சம்பந்தனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்
பொதுமக்கள் அஞ்சலி
தந்தை செல்வா கலையரங்கில் இருந்து இன்று காலை கார் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து திருகோணமலைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.


இதேவேளை சம்பந்தனின் பூதவுடல் திருகோணமலையில் இரண்டு தினங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.

மேலும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (07-07-2024) இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




புதியது பழையவை