அரசியல் குழு உறுப்பினராக சிறிதரன்..!



இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற குழுத்தலைவர் சிறீதரனை அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் அரசியல் குழு உறுப்பினராக முன்மொழிந்தார்.!

பாராளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பில் சிறீதரன் எம்பி தெரிவுசெய்யப்பட்டனர்.

இன்று (06/12/2024)காலை பாராளுமன்றில், அரசியலமைப்பு குழுவிற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் சிறீதரன் எம்பி வெற்றி பெற்றுள்ளார். 

25 உறுப்பினர்களில் ஒருவரை அரசியலமைப்பு குழுவிற்கு நியமிப்பதற்காக கேட்கப்பட்டது, அப்போது சிறீதரன் எம்பியை தமிழரசுக்கட்சியும் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமாரும் வழிமொழிந்து முன்மொழிந்தார்கள். 

கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்களை நாமல் நாஜபக்சவும், ரவி கருணாநாயக்கவும் வழிமொழிந்து முன்மொழிந்தார்கள். பின்னர் நடந்த வாக்கெடுப்பில் நால்வர் வாக்களிக்காமல் விலக, 21 வாக்குகளில் 11 வாக்குகளை சிறீதரன் எம்பியும், 10 வாக்குகளை கௌரவ ஜீவன் தொண்டமானும் பெற்றனர். 1 வாக்கு வித்தியாசத்தில் சிறீதரன் எம்பி அரசியலமைப்பு குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டார்.
புதியது பழையவை